ஆண்கள் கோலோச்சும் திரைஉலகில் பெண்கள் ஜொலிப்பது அத்தி பூத்த நிகழ்வு தான்.
குடும்ப கூட்டில் இருந்து கொண்டே/வெளியே வந்து, பொதுவெளியில் தன்னை ,தனித்துவமாய் நிருபிக்க எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு சவால்கள் அதிகம்.
அதில் எத்தனை பெண்கள் தான் செய்ய / சொல்ல நினைத்ததை திரையில் செயல்படுத்துகிறார்கள் என்பது தான் யோசிக்க வேண்டிய விஷயம்.
தென்னிந்தியாவை பொருத்தவரை ஒரு பெண், இயக்குனர் ஆவது பெரிய விஷயம் என்றால், அதில் சக்சஸ் ஆகி தன்னை நிருபிப்பது மிக,மிகப்பெரிய விஷயம்.
கோலிவுட்டில், இடையில் இடையில் சில பெண் இயக்குனர்கள் வந்து தங்கள் இருப்பினை பதிவு செய்தாலும்...ஏன் தொடர்ந்து அவர்களால் படங்கள் செய்ய முடிவதில்லை?
பானுமதி முதல் சுஹாசினி,பிரியா,லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,ஜெயசித்ரா,ஐஸ்வர்யா,கிருத்திகா என்று பட்டியலை அடுக்கி கொண்டே சென்றாலும்....ஏதோ ஒரு தேக்கம் தொடர்ந்து கொண்டே இருக்க தான் காரணம் என்ன?
பொதுவாய் ஒரு சராசரி திரை ரசிகனிடம் குறையாய் சொல்லப்படும் 'இந்த பொம்பளைகளிடம் நகைச்சுவை உணர்வு கம்மி' என்று தொடங்கும் அலட்சியம் 'ஏதோ ஒரு பொம்பளை இந்த படத்தை எடுத்திருக்காம்" மில் பஞ்ச் வைக்கிறது ஒரு பெண் இயக்குனரின் தோல்வி .
கமர்சியல் ஹிட் கொடுக்க முடியாத பெண் இயக்குனர்கள் , எவ்வளவு தான் தன் கதையில் மாயா ஜாலங்கள் புரிந்தாலும், அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாத ஒரு நிலை வந்து விடுவதும் நிஜம்.
ஒரு பெண் இயக்குனரால் சில விஷயங்கள் காம்ப்ரமைஸ் பண்ண முடியாத காரணத்தினாலும், கமர்சியல் வேல்யூவை இழக்கும் அபாயத்தில் சிக்கி கொள்கிறார்.
1. தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத "அய்ட்டம் சாங்" கலாச்சாரத்தை ஒரு பெண் இயக்குனர் விரும்புவதில்லை.
2.டிரஸ் எக்ஸ்போஸ் ஐ ஊக்குவிப்பதில்லை.
3.மரபு விதிகளான அருவாள் சண்டைகளும்,ஜீப் சண்டைகளும் புகுத்த முடிவதில்லை.
இவ்வகை ரசனைகளை உள்ளடக்கி பி மற்றும் சி சென்டரில் படம் பார்க்க வரும் ரசிக கண்மணிகளை திருப்தி படுத்தாத பெண் இயக்குனர்கள் மண்ணை கவ்வுகிறார்கள்.
சில மரபு விதிகள் கையாலப்படும்போது அப்பெண் இயக்குனர் கழுவி, கழுவி ஊத்தபடுவார்.
கற்பனை வளங்களும்,மெல்லிய ரசனைகளும் தன்னுள்ளே அதிகமாய் வைத்திருக்கும் ஒரு பெண்ணால் நினைத்த அளவிற்கு அதை திரையில் கொண்டுவர முடிகிறதா என்றால் அதுவும் இல்லை, வியாபார காம்ப்ரமைசில் சிக்கும் மார்கெட் மேனியா அங்கே முன்னிலை படுத்தப்பட்டு, மற்ற எல்லாவையும் பின்னுக்கு தள்ளப்படுகிறது.
அதையெல்லாம் தவிர்த்து வெற்றி பெற போராடும் அந்த பெண் படைப்பாளிக்கு சமூக கட்டமைப்புகள் எந்த அளவுக்கு உதவுகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.
பல ஆண்டுகளாய் உதவி இயக்குனர்களாக இருந்த பெண்களில் வெகு சிலரே இயக்குனர்களாய் வெளி வந்திருக்கிறார்கள்.
மற்றபடி துட்டு இருக்கும் சில சீமாட்டிகளே இப்போதெல்லாம் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சூழல்.
பெண்கள் இதிலும் டப் கொடுக்கும் காலம் விரைவில் வரட்டும். போட்டியின் பலனாய் திரை உலகம் மாறி உருப்பட்டால் சரி.
நல்ல அலசல்..கமர்சியல் படங்களை பெண்களாலும் எடுக்க முடியும் என்று யாராவது நிரூபித்தால் சரி....
ReplyDelete