Wednesday 2 July 2014

உருப்படாத கல்வி முறையை மாத்துங்களேன் மம்மிஜி!



சமீபத்தில் என் உறவுக்காரரின் மகன்  ஐ சி எஸ் சி போர்டு முறையில் இருந்து ஸ்டேட் போர்டு முறைக்கு பதினோராம் வகுப்பில் சேர்ந்து இருந்தான் . சேர்ந்த ஒரு வாரமாய் அவன் வீட்டில் ஒரே சண்டையும், விவாதமும் தான்.

என்ன பிரச்சனை என கேட்டால், அந்த பையன் புலம்பல் ரொம்பவே யோசிக்க வைத்தது.

அவன் முதலில் பதினோராம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து வைத்தான். இங்கே ஆரம்பிக்குது பிரச்சனை என்றான். நான் சிரித்து கொண்டே, என்ன  வழக்கம்போலே வரும் தமிழ் பீவரா ? என்றேன். நிச்சயமா இல்லை என்று தொடர்ந்தான்.

அவன் படித்த ஐ.சி.எஸ்.ஈ சிலபஸ்- ஸில்  எழுதுவதற்கு, யோசிப்பதற்கு நிறைய சுதந்திரம் இருந்தது , தமிழ் பாடம் உட்பட என்றான்...

நான் ஆச்சரிய மானேன். தொடர்ந்து கூறினான், அவன் பத்தாம் வகுப்பில் மூன்று நாவல்கள் மட்டுமே படிப்பு. எந்த இலக்கணமும், மனப்பாடமும், செய்யுளும்,உரைநடையும் எதுவும் இல்லை என்றான்.முழுக்க, முழுக்க எளிய எழுத்து நடைக்கும் ,கற்பனை திறனுக்கும் மட்டுமே மதிப்பெண்கள் ...

நான் சிறிது யோசனையுடன், அப்போ, இதெல்லாம் தப்புன்னு சொல்றயானு  கேட்டேன்..

அதற்கு அவன் சொன்னது:

1.தப்பா, சரியானு தெரியலை , ஆனால், இந்த மனப்பாட செய்யுளும், அதன் தெளிவுரையும் ,இலக்கணமும் என் நடை முறை வாழ்வில் எப்படி உதவும் நு நினைக்கிறேங்க...??

2. என் தாய்மொழியை பேசத்தெரியும், எளிமையாய் எழுதவும் தெரியும், என் சமூக வாழ்க்கையில் இந்த செய்யுளுக்கு வேலை தான் என்ன? மாணிக்க வாசகர் எழுதியதை நான் படிச்சு மார்க் வாங்கி என்ன பண்ண போறேன்?? 

3.இந்த வினை எச்சமும், உயிரளபடையும் தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்?


இந்த சிலபஸ் எனக்கு எந்த வகையில் பிரயோஜனப்படும் நு கேட்கிறான் .

தொடர்ந்து அவன் சொன்னது ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அவனுடன் பத்தாம் வகுப்பில் அந்த  சிலபஸ் இல் படித்த மற்ற மாணவர்கள் எல்லாம் அங்கே தமிழ் பாடம் எடுத்து விட்டு, இந்த போர்டு க்கு வந்து இதை எல்லாம் பார்த்து மிரண்டு இவனை தவிர அனைவரும் பிரெஞ்சு பாடம் எடுக்க மாறிட்டாங்கனு சொன்னான்.

சரிடா...அதுக்கு ஏன் இங்கே  உன் வீட்டிலும் சண்டை போடுற? 

ம்ம்..பிரெஞ்சு   நானும்  மாறத்தான் ...

ஓ..அப்போ மாற வேண்டியது தானே...

அட...அப்பா சொல்றார்...தமிழ் இருந்தால்  தான் அரசாங்க வேலை கிடைப்பது ஈஸியாம் ...

அப்போ  தமிழ் உனக்கு பிடிக்கலை...அப்படி தானே  ...

நிச்சயமா இல்லை...தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு...தமிழில் பத்தாம் வகுப்பில் நான் தான் பள்ளியில் முதல் இடம்...ஆனால் தமிழ்நாடு போர்டு இல் இருக்கும் இந்த திணிப்பு, உதவாத தமிழ் பாடத்திட்டம் சுத்தமா பிடிக்கலை....அதான்...

ம்ம்....எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை...

நிறைய குழப்பத்தோடும்,யோசனையோடும் வெளியே வருகிறேன்...தமிழ்நாட்டு முதல்வர் மம்மியும் இதை யோசிக்கும் காலம் வரட்டும்...

No comments:

Post a Comment